எங்கள் குலதெய்வம் அப்பச்சி

அம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டை!!!அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்!!!!.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

பதினென் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :

ஆதி காலத்திலே தில்லை திருமூலர்அழகுமலை இராமதேவர்அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்கமலமுனி ஆரூர்சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்சுந்தரானந்தர் கூடல்சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்றாள் காசி நந்திதேவர்ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டிபழனி மலை போகநாதர்திருப்பரங்குன்றமதில் மச்சமுனிபதஞ்சலி இராமேசுவரம்சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்கோரக்கர் மாயூரங்குதம்பர்திருவருணையோர் இடைக்காட சமாதியிற்சேர்ந்தனர் எமைக் காக்கவே.-இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.மதுரை-அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான 1. பஞ்சமுக சுரேஸ்வர சித்தர், 2. சதுர்முக சுரேஸ்வர சித்தர், 3. திரிபலாதர சுரேஸ்வர சித்தர் 4. ஸ்கந்த பதுமபலாதி சித்தர் 5. திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள். இவர்களை வழிபட சகல பாபங்களும் தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக